sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாய்க்கு உமிழ்நீர் சுரப்பி அறுவை சிகிச்சை

/

நாய்க்கு உமிழ்நீர் சுரப்பி அறுவை சிகிச்சை

நாய்க்கு உமிழ்நீர் சுரப்பி அறுவை சிகிச்சை

நாய்க்கு உமிழ்நீர் சுரப்பி அறுவை சிகிச்சை


ADDED : மார் 20, 2025 05:50 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மேலுாரைச் சேர்ந்த 11 வயதுடைய நாட்டு, பொமரேனியன் கலப்பின நாய்க்கு உமிழ்நீர் சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டு வீங்கியது. தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் உதவி டாக்டர்கள் மெரில்ராஜ், குருசாமி, பயிற்சி டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.

டாக்டர் மெரில்ராஜ் கூறியதாவது: கழுத்தில் அணிவிக்கும் பெல்ட் இறுக்கமாக இருந்தாலும் பிற நாய்களுடன் சண்டையிடும் போது காயம் ஏற்பட்டாலோ, கிருமித்தொற்றாலோ உமிழ்நீர் சுரப்பி குழாயில் அடைப்பு ஏற்படலாம். இந்த நாயின் 11 வயது என்பது மனிதர்களின் 90 வயதிற்கு சமம் என்பதால் முதுமை ஒரு சவாலாக இருந்தது. ரத்த இழப்பு அதிகமாகும் வாய்ப்பும் இருந்தது. ரத்தஇழப்பை குறைப்பதற்காக 'எலக்ட்ரோ காட்ரி' இயந்திரத்தை பயன்படுத்தி உமிழ்நீர் சுரப்பி, உமிழ்நீர் சுரப்பி குழாய் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம் என்றார். டாக்டர்களை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுப்பையன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us