sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேவாங்குகள் அழிவை தடுக்க சரணாலயம் வனஆர்வலர்கள் வலியுறுத்தல்

/

தேவாங்குகள் அழிவை தடுக்க சரணாலயம் வனஆர்வலர்கள் வலியுறுத்தல்

தேவாங்குகள் அழிவை தடுக்க சரணாலயம் வனஆர்வலர்கள் வலியுறுத்தல்

தேவாங்குகள் அழிவை தடுக்க சரணாலயம் வனஆர்வலர்கள் வலியுறுத்தல்


ADDED : ஜன 03, 2024 06:35 AM

Google News

ADDED : ஜன 03, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: கேசம்பட்டியில் அரியவகை உயிரினமான தேவாங்குகளின் அழிவை தடுக்க சரணாலயம் அமைக்க வேண்டும்.

இங்கு பாலுாட்டி வகையைச் சேர்ந்த செந்தேவாங்கு, சாம்பல் தேவாங்குகள் பாறைக்குன்றுகள், மலைப்பகுதி, அடர்ந்த காடுகளில் அதிகம் வாழ்கின்றன.

பறவை முட்டை, பல்லி, இழை தழைகளை சாப்பிடக்கூடியது. தற்போது மனிதர்களால் இவை அழிக்கப்பட்டு வருகின்றன.

வனஆர்வலர் ஜீவா: தேவாங்குகள் இரவில் உணவு தேடி செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. தேவாங்கு மருத்துவ குணம் நிறைந்தது என மக்கள் நம்புவதால் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேட்டையாடுகின்றனர்.

அதனால் அரியவகை உயிரினமான தேவாங்கு வேகமாக அழிந்து வருவதால் வனத்துறையினர் கரூர், திண்டுக்கல் போல் இப்பகுதியிலும் சரணாலயம் அமைத்து பாதுகாக்க முன் வரவேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us