sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சி நீச்சல்குளத்திற்கு 'சீல்'

/

மாநகராட்சி நீச்சல்குளத்திற்கு 'சீல்'

மாநகராட்சி நீச்சல்குளத்திற்கு 'சீல்'

மாநகராட்சி நீச்சல்குளத்திற்கு 'சீல்'


ADDED : ஏப் 09, 2025 04:40 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் ஒப்பந்த காலம் முடிவுற்றதாக கூறி மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு அலுவலர்கள் 'சீல்' வைத்தனர். இதற்கு ஒப்பந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காந்தி மியூசியம் அருகேயுள்ள இந்த நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. மாநகராட்சி வருவாய் அலுவலர் ராஜாராம் தலைமையில் 'ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாக' கூறி நீச்சல் குளத்திற்குள் உள்ள ஆபீசர் அறை, பக்கவாட்டு நுழைவு கேட்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இதற்கு ஒப்பந்ததாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனர் சித்ராவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து துணை கமிஷனர் ஜெய்னுலாவுதீன் விசாரணை நடத்தினார்.

நீச்சல்குள பொறுப்பாளர் ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாடு நீச்சல் சங்கம் துணைத் தலைவர் முனியாண்டி இதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளார். 2021 முதல் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 2029 வரை ஒப்பந்தம் உள்ளது. அதற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஒப்பந்தம் முடிந்தது தொடர்பாக மாநகராட்சியில் இன்றும் விசாரணை நடக்கவுள்ளது.






      Dinamalar
      Follow us