ADDED : ஜன 28, 2026 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் மதன்குமார் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
நேற்று அவரிடம் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிளைச் சிறைக்கு சென்றார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவரிடம் த.வெ.க., பற்றி கேட்டதற்கு, 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறியவர், 'அதற்கு பொதுச் செயலாளர் பழனிசாமி பதிலளிப்பார்' என நழுவினார்.

