ADDED : அக் 12, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் 18, 19, 23, 24 வார்டுகள் வழியாகச் செல்லும் ஒரு கி.மீ., நீளமான கழிவுநீர் கால்வாய் நீண்ட காலமாக துார்வாரப்படாமல் இருந்தது.
மழைக்காலம் வருவதைத் தொடர்ந்து இக்கால்வாயை துார்வாரும் பணியை நகராட்சித்தலைவர் சகுந்தலா துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் பொன்பாண்டியம்மாள், சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.