ADDED : ஜூலை 01, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே மளிகை கடை ஒன்றில் மேலவளவு நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக வி.சி.க.,வைச் சேர்ந்த சிலர் நன்கொடை கேட்டனர்.
உரிமையாளர் திருப்பதி ரூ. 200 கொடுக்கவே, அது போதாது என வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் கடை ஊழியர்களுக்கும், நன்கொடை கேட்டவர்களுக்கும் அடிதடி ஏற்பட்டது. இதை கண்டித்து மேலுாரில் அனைத்து சங்கத்தினரும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.