/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சூடுபிடிக்காத சூரிய மின்சாரம்! மதுரை கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; மழைநீர் சேகரிப்பு போல கட்டாயப்படுத்தினால் வெற்றி
/
சூடுபிடிக்காத சூரிய மின்சாரம்! மதுரை கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; மழைநீர் சேகரிப்பு போல கட்டாயப்படுத்தினால் வெற்றி
சூடுபிடிக்காத சூரிய மின்சாரம்! மதுரை கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; மழைநீர் சேகரிப்பு போல கட்டாயப்படுத்தினால் வெற்றி
சூடுபிடிக்காத சூரிய மின்சாரம்! மதுரை கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; மழைநீர் சேகரிப்பு போல கட்டாயப்படுத்தினால் வெற்றி
ADDED : ஆக 19, 2025 01:14 AM

மதுரை; பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை மதுரை மாவட்ட கிராமப்பகுதிகளில் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கூரையில் குறைந்தபட்சம் ஒரு கிலோவாட் திறனுள்ள பேனல் நிறுவினால் ஒருநாளில் 4 முதல் 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனை நிறுவ ரூ.ஒரு லட்சம் வரை செலவாகும். இதில் ரூ.30 ஆயிரம் அரசு மானியமாக தருகிறது. ரூ.1.50 லட்சம் செலவில் 2 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 60 ஆயிரம், ரூ.2 லட்சம் செலவில் 3 கிலோவாட் அதற்குமேல் தயாரிக்க ரூ.78 ஆயிரம் வரை மானியம் உண்டு. குறைந்தபட்சம் 15 அடிக்கு 15 அடி மேல்தளம் உள்ள வீடுகளில் இதனை அமைக்கலாம். இத்திட்டம் முழுமையாக செயல்பட்டால் மின்தேவை பெருமளவு பூர்த்தியாகி, அரசின் செலவு ரூ. பல லட்சம் கோடி மிச்சமாகும்.
இத்திட்டம் 2024 பிப்ரவரியில் துவங்கியபோது மதுரை மாவட்டத்தில் 2027க்குள் 15 ஆயிரம் வீடுகளில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சி பகுதியில் ஆயிரம் வீடுகளிலும், கிராம அளவில் 322 வீடுகளிலுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: ஒரு கிலோவாட் தயாரிக்க ரூ. ஒருலட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதில் 240 யூனிட் கிடைப்பதாக கொள்வோம். வீட்டில் 2 மாதத்தில் 300 யூனிட் பயன்படுத்தினால், அதில் நுாறு யூனிட் இலவச மின்சாரம் போக, மீதியுள்ள யூனிட்டுக்கு ரூ. 200 வரை கட்டணம் வரும். இது பெரும் சுமையாக தெரியாததால், பலர் முன்வருவதில்லை. வீடுகளுக்கு மட்டுமே இந்த மானியம் என்பதாலும் கிராமப்பகுதிகளில் இது எதிர்பார்த்த அளவு 'ரீச்' ஆகவில்லை. இதனை மழைநீர் சேகரிப்பு போல கட்டாயம் என்பன போன்ற நடவடிக்கைகளால்தான் முழுமையாக வெற்றி பெறும் என்றனர்.