ADDED : நவ 23, 2025 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை தீஷா யோகா அறக்கட்டளை சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. குழு போட்டிகளில் பசுமலை பி.கே.என். பள்ளி மாணவர்கள் முதல் பரிசு, அவனியாபுரம் பி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி 2ம் பரிசு, ஜீவாநகர் செஞ்சான் பீட்டர் மெட்ரிக் பள்ளி 3ம் பரிசு வென்றனர்.
செஞ்சான் பீட்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் வினோத், பி.கே.என். பள்ளி முதல்வர் அமுதா, பி.எம்.எஸ். பள்ளி தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், துணைச் செயலாளர் பாலமுருகன், பள்ளி முதல்வர் தமிழ்ச்செல்வி பாராட்டினர். ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் கார்த்திக் செய்திருந்தார்.

