/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் ஊழியர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சி
/
பஸ் ஊழியர்களுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சி
ADDED : மார் 01, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பசுமலை அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மனஅழுத்த நிவாரண பயிற்சி அளிக்கப்பட்டது. மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். வாய்ஸ் டிரஸ்ட் இயக்குனர் முருகேசன், இயற்கை மருத்துவம் தொடர்பாக பேசினார். அரசு மருத்துவமனை யோகா, இயற்கை வைத்திய பிரிவு மருத்துவர் பிரித்திகா, யோகா மூலம் மனஅழுத்த நிவாரண பயிற்சியை அளித்தார்.
போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு இணை இயக்குனர் பாஸ்கரன் வரவேற்றார். பொதுமேலாளர்கள் சமுத்திரம், ராகவன், கோட்ட கிழக்கு மேலாளர் தயாள கிருஷ்ணன், உதவி மேலாளர்கள் முருகேசபாண்டியன், ராஜகுரு, ஆறுமுகச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

