ADDED : அக் 17, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: கேரள மாநிலம் கொச்சியில் தென்னிந்திய கராத்தே போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
அலங்காநல்லுார் கொஞ்சோ கராத்தே தலைமை பயிற்சி மையத்தில் பயிலும் அனுப்பானடி அமலி மெட்ரிக் பள்ளி, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 10 முதல் 19 வயது வரையிலான கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் முதல், 2ம் இடங்களை பிடித்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.
வென்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் பாலகுரு, பயிற்சியாளர் பிரவினை அமலி பள்ளி முதல்வர் அமலா, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.