sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்

/

 தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்

 தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்

 தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்


ADDED : நவ 24, 2025 06:51 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

இங்குள்ள அரசு பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் படித்து வருகின்றனர். மாலையில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததாலும் தாமதமாக வருவதாலும் சிரமம் அடைகின்றனர். மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் 5:30 மணிக்கு வரும் எழுவம்பட்டி, 6:00 மணிக்கு வரும் உடன்காட்டுப்பட்டி பஸ்களில் வீட்டிற்கு திரும்பும் நிலை உள்ளது.

பல சமயங்களில் சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. மேலும் பல 'ட்ரிப்'களும் 'கட்' ஆகின்றன. இதனால் பல மாணவர்கள் டூ வீலர்களில் 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர். நடந்தும் செல்கின்றனர். இரவு 7:00 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் நிலை உள்ளது. மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் நனைந்து கொண்டே வீடுகளுக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாகவும், கூடுதலாகவும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us