/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்களில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடி
/
கோயில்களில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடி
ADDED : ஜன 02, 2024 05:55 AM

திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள், திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடந்தது.
விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவர்களுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி பூஜை நடந்தது. கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கொல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
திருநகர் மகாலட்சுமி காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்கு தங்கக் கவசம், உற்ஸவருக்கு ஏகாந்த சேவை அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது.

