/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சுவாமி அம்பு எய்தல் விழா
/
குன்றத்தில் சுவாமி அம்பு எய்தல் விழா
ADDED : அக் 03, 2025 01:27 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் செப். 22ல் துவங்கிய நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
நேற்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி வில், அம்புடன் தங்கக் குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினர். யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்தது. வன்னி மரத்தடியில் வில், அம்பு வைக்கப்பட்டு சந்தனம், மஞ்சள் திரவிய அபிஷேகங்கள், விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்கு பலி பூஜை முடிந்து சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில், அம்பு வழங்கப்பட்டது. அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். திருக்கண் மண்டபகப்படிகளில் சுவாமி எழுந்தருளி சேர்த்தி சென்றார்.