ADDED : அக் 27, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் 50. மதுரை வடக்கு தாசில்தாராக பணியாற்றியவர். தற்போது மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். நேற்று மதியம் மதுரையில் இருந்து பேரையூருக்கு பஸ்சில் வந்தார். பஸ்சில் கூட்டமாக இருந்ததால் நின்று கொண்டு பயணித்தார்.
டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

