sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வேலைநிறுத்த நாளில் தேர்வா தள்ளிவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

/

 வேலைநிறுத்த நாளில் தேர்வா தள்ளிவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 வேலைநிறுத்த நாளில் தேர்வா தள்ளிவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 வேலைநிறுத்த நாளில் தேர்வா தள்ளிவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்


ADDED : நவ 15, 2025 05:03 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'மதுரையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நாளில் மாணவர்களுக்கு இடைப்பருவத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை மாற்றி வைக்க வேண்டும்' என சி.இ.ஓ., தயாளனிடம் வலியுறுத்தப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்த ஜாக்டோஜியோ சார்பில் நவ. 18ல் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. அதேநாளில் ஆறு முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு 2 ம் இடைப்பருவத் தேர்வை நடத்துவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. போராட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த நாளில் தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் சி.இ.ஓ., தயாளனை சந்தித்து மனு அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது: இத்தேர்வு ஏற்கனவே நவ.10 முதல் 12 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நவ. 17 முதல் 19 வறை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.18 ல் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அந்த நாளில் தேர்வை வைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. நவ.18 ல் நடக்கும் தேர்வை மாற்றி அறிவிக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us