
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் காமாட்சி அம்மன் கோயில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், திருவிளக்கு பூஜையும் நடந்தது.
பின்னர் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (செப். 8) முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.