sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொண்டையில் சிக்கியது டப்பா குழந்தையை மீட்டனர் டாக்டர்கள்

/

தொண்டையில் சிக்கியது டப்பா குழந்தையை மீட்டனர் டாக்டர்கள்

தொண்டையில் சிக்கியது டப்பா குழந்தையை மீட்டனர் டாக்டர்கள்

தொண்டையில் சிக்கியது டப்பா குழந்தையை மீட்டனர் டாக்டர்கள்


ADDED : அக் 03, 2024 05:54 AM

Google News

ADDED : அக் 03, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலத்தில் குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை ஒரு மணி நேரம் போராடி அரசு டாக்டர்கள் வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர்.

திருமங்கலம் ரோஜா தோட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹசீனா பானு. இவரது இரண்டரை வயது மகள் ஆலியா. ஹசினா பானு வேலைக்கு செல்வதால் குழந்தையை தனது அம்மா மெஹரஜ் பானுவிடம் விட்டுச் செல்வார். நேற்று முன்தினமும் குழந்தையை விட்டு விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

நேற்று இரவு 7:00 மணிக்கு குழந்தை தரையில் கிடந்த தைல டப்பாவை வாயில் வைத்து விளையாடியுள்ளது. எதிர்பாராத விதமாக தைல டப்பா தொண்டையில் சிக்கியது. குழந்தை பேச முடியாமல், அழ முடியாமல், மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் தரையில் கிடந்துள்ளது. குழந்தையின் பாட்டி மெகரஜ் பானு குழந்தையை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பணியில் இருந்த டாக்டர் சிவகரன், நர்சுகள் ஒரு மணி நேரம் போராடி குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த தைல டப்பாவை வெளியில் எடுத்து குழந்தையை காப்பாற்றினர்.






      Dinamalar
      Follow us