ADDED : அக் 25, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சோலையழகுபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர்.
இவரது மகன்கள் ரகுமான் 30, ஷாஜகான் 28. இருவரும் கறிக்கடை ஊழியர்கள். இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது.
நேற்று வீட்டில் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமுற்ற ஷாஜகான், அண்ணன் ரகுமானை கறி வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

