ADDED : அக் 27, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றத்தில் திருக்குறள் வளர்ச்சிப் பட்டறை சார்பில், தலைவர் விசுவநாததாசன் தலைமையில் திருக்குறள் திருவிழா நடந்தது.
மாநில வருங்கால வைப்புநிதி கமிஷனர் அழகிய மணவாளன், செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, பாரதி இலக்கியப் பேரவை நிர்வாகி பத்மநாதன் முருகன், மாணிக்கம் ராமசாமி கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ரமேஷ்குமார், மதுரைத் திருவள்ளுவர் கழக பொருளாளர் சந்தானம் பேசினர்.
திருக்குறள் பட்டிமன்றம், கவியுரை, கருத்துரை வழங்கப்பட்டன.ஆசிரியர் வனஜா நன்றி கூறினார். கவிஞர் அம்பிகா தொகுத்து வழங்கினார்.

