/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முத்துத்தேவர் பள்ளியில் முப்பெரும் விழாக்கள்
/
முத்துத்தேவர் பள்ளியில் முப்பெரும் விழாக்கள்
ADDED : பிப் 21, 2024 06:14 AM

திருநகர்: மதுரை திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்துத்தேவர் 129வது ஜெயந்தி விழா, பள்ளியின் 67ம் ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.
பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டுப்புற கலைகள், மேற்கத்திய இசை, நடனப் போட்டிகள் நடந்தன.
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 200 மாணவர்கள் பரிசு பெற்றனர்.
பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் பரிசு வழங்கினர்.
கடந்தாண்டு நடந்த பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திருநகர் லயன்ஸ் சங்க ஜெகநாதா ராஜா, நடன குருநாதன் பரிசு வழங்கினர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுந்தரம், மணி அரசன், பொதுத் தேர்வு களில் 100 சதவித தேர்ச்சி பெற்ற வகுப்பாசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
ஆசிரியர்கள் சரவணன், ராஜகோபால், அன்பு கார்த்திகாயினி தொகுத்து வழங்கினர். ஆசிரியர் கமல ஜோதி நன்றி கூறினார்.

