ADDED : டிச 25, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி,: வீர சூடாமணி பட்டியில் ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயிலுக்கு சொந்தமான காளை உடல்நல குறைவால் நேற்று முன்தினம் இறந்தது. இறந்த காளையை ஐந்து கிராம மக்கள் அலங்காரம் செய்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அருகே அடக்கம் செய்தனர்.
பிறகு கிராம மக்கள் அனைவரும் காளைக்கு இறுதி மரியாதை செய்தனர். இக்காளை கடந்த 10 ஆண்டுகளாக அலங்காநல்லுார், பாலமேடு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

