ADDED : பிப் 14, 2026 09:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வன், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா ஆகியோரின் 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்தது. அரசு உத்தரவுபடி நேற்று மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டனர். அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரதீபா, கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி சத்தியசீலன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அறங்காவலர் குழுவினருக்கு தி.மு.க,. வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.

