ADDED : அக் 21, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா எஸ்.ஐ., சேகர் தலைமையில் போலீசார் ஆரியபட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில்
வந்த திருப்பரங்குன்றம் நாகராஜ் 25, விஷ்ணுகுமார் 23, ஆகியோரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.