sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செய்தி தொடர்பாளர்கள் நியமனம் அரசின் தோல்வியை காட்டுகிறது சொல்கிறார் உதயகுமார் 

/

செய்தி தொடர்பாளர்கள் நியமனம் அரசின் தோல்வியை காட்டுகிறது சொல்கிறார் உதயகுமார் 

செய்தி தொடர்பாளர்கள் நியமனம் அரசின் தோல்வியை காட்டுகிறது சொல்கிறார் உதயகுமார் 

செய்தி தொடர்பாளர்கள் நியமனம் அரசின் தோல்வியை காட்டுகிறது சொல்கிறார் உதயகுமார் 


ADDED : ஜூலை 16, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்துள்ளது அரசின் தோல்வியை காட்டுகிறது என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தற்போது துவக்கி வைக்கிறார். அப்படி என்றால் ஏற்கனவே தொடங்கிய 'மக்களுடன் முதல்வர்' திட்டம் காலாவதியாகிவிட்டதா. திங்கள்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் முகாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா சிறப்பு திட்ட முகாம், முன்னாள் முதல்வர் பழனிசாமி கொண்டுவந்த முதலமைச்சர் சிறப்பு குறைதீர் முகாம் என்ன ஆனது. இன்றைக்கு மக்களை தேடி அரசு என்று சொல்லுகிறீர்கள். நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.

அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த 2 அதிகாரிகள் உள்ளபோது, 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிப்பது ஏன். இந்த அறிவிப்பு அரசின் தோல்வியை காட்டுகிறது. அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதை திசைதிருப்புவதற்காக நல்ல அதிகாரிகளை பயன்படுத்தி முட்டுக் கொடுக்க நினைக்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us