
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் திரவுபதை அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்து அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தர்மராஜாவுக்கும், திரவுபதை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இவ் விழாவில் மேலுார் பகுதி பக்தர்கள் பங்கேற்றனர்.