sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை

/

நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை

நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை

நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை இயக்க வைகோ கோரிக்கை


ADDED : நவ 21, 2024 04:42 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மைசூரு - துாத்துக்குடி விரைவு ரயிலை ஈரோடு வழியாக இயக்காமல் நாமக்கல் வழியாக இயக்க ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி, சிவகாசி, ராஜபாளையம் ஊர்களில் வசிப்போர் பெங்களூரு செல்ல துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயிலை (16235) நம்பி உள்ளனர்.

மாலை 6:00 மணிக்கு குருவாயூர் - மதுரை பாசஞ்சரில் விருதுநகர் வந்து இரவு 7:00 மணிக்கு புறப்படும் மைசூரு ரயிலில் பெங்களூரு செல்வர். அதே போன்று விருதுநகர், மதுரை, திண்டுக்கல் பயணிகள் பெங்களூரு, மைசூரு செல்லவும் இந்த ரயிலே உள்ளது. இந்த ரயில் கரூர் - ஈரோடு - சேலம் வழியாக இயக்கப்படுகிறது.

ஈரோட்டில் இன்ஜின் திசை மாற்றப்படுவதால் 45 நிமிடம் வரை நேர விரயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மறுமார்க்கத்தில் மைசூரில் இருந்து மாலை 6:20 மணிக்கு புறப்படும் ரயில் (16236), மறுநாள் காலை 7:25 மணிக்கு தான் மதுரை வருகிறது. ஆனால் மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு சென்று விடுவதால் செங்கோட்டை வழி செல்லும் பயணிகள் 'கனெக்டிவிடி' ரயில் கிடைக்காமல் பஸ்களில் செல்கின்றனர்.

வைகோ தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 2003ல் செங்கோட்டையில் இருந்து பெங்களூருவிற்கு ரயில் இயக்க மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதுவரை இயக்கவில்லை. ஈரோட்டில் இருந்து கே.எஸ்.ஆர்., பெங்களூருவிற்கு 6 ரயில்கள் உள்ளன. மைசூரு - துாத்துக்குடி ரயிலை சேலத்தில் இருந்து ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியாக நேர்வழியில் இயக்கினால் 40 கி.மீ துாரம் குறையும். கட்டணம் குறைவதுடன் நேரமும் மிச்சமாகும்.

சேலத்திற்கு அதிகாலை 2:00 மணிக்கு வரும் ரயில் நாமக்கல் வழியாக 3:45க்கு கரூர், 6:30 மணியளவில் மதுரைக்கு வந்துவிடும். இதனால் செங்கோட்டை வழி செல்லும் பயணிகள் காலை 7:10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் செங்கோட்டை பாசஞ்சரில் செல்ல முடியும். எனவே மைசூரு - துாத்துக்குடி ரயிலை ஈரோடு வழியாக இயக்காமல்நாமக்கல் வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us