/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொறியியல் கல்லுாரியில் கழிவு மேலாண்மை பயிற்சி
/
பொறியியல் கல்லுாரியில் கழிவு மேலாண்மை பயிற்சி
ADDED : நவ 01, 2024 05:13 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் இலவச கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர், கல்லுாரி முன்னாள் டீன் வாசுதேவன், பேராசிரியர் ராமலிங்க சந்திரசேகர் கூறியதாவது: மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பால் பல்லாயிரம் டன் திட, திரவ கழிவுகள் குவிகிறது. அவை நிலம், நீர் காற்றை மாசுபடுத்துகின்றன. அவற்றை மறு சுழற்சி செய்வது மிகவும் அவசியமானது.
புதிய தொழில்நுட்பங்கள், நுண்ணுயிர்கள் வாயிலாக மக்கும் கழிவுகளையும், மறுசுழற்சி வாயிலாக மக்காத கழிவுகளையும் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய முடியும். சுயதொழில், தொழிற்சாலை வேலை வாய்ப்பு, அரசு மானியம் ஆகியவற்றுடன் இந்த துறை வேகமாக வளர்கிறது. இது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோரிடம் இல்லை.
எனவே வேலையில்லா பட்டதாரிகளுக்கு இந்த தொழில்நுட்பங்கள் குறித்து, மத்திய வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை சார்பில் 3 மாதம் இலவச பயிற்சி தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் வழங்குகிறது. இதில் மத்திய அரசின் சான்றிதழ், வங்கி கடன், புதிய வேலை வாய்ப்பு, சுயதொழில் துவங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்படும். பங்கேற்பாளர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம்.
ஆர்வமுள்ளோர் www.tce.edu மற்றும் www.tceeiacp.in என்ற இணைய தளங்களில் நவம்பர் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 9442419316 ல் பேசலாம் என்றனர்.

