/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி
/
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : பிப் 01, 2024 04:04 AM
மதுரை, : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை குமார் 2011ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 1 கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோயில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: வழக்கறிஞர் கமிஷனர்களை நியமித்து விதிமீறல் கட்டடங்களை அடையாளம் காண ஏற்கனவே இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விதிகளை மீறி 500 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அக்கட்டடங்களுக்கு மாநகராட்சி வரி வசூலிக்கிறது.
மாநகராட்சி தரப்பு: படிப்படியாக நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிப்.7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.