sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காட்சிப்பொருளான டேங்க் திறப்பு விழா என்னாச்சு

/

காட்சிப்பொருளான டேங்க் திறப்பு விழா என்னாச்சு

காட்சிப்பொருளான டேங்க் திறப்பு விழா என்னாச்சு

காட்சிப்பொருளான டேங்க் திறப்பு விழா என்னாச்சு


ADDED : மார் 27, 2025 04:56 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: அழகாபுரியில் மேல்நிலை தொட்டி கட்டி எட்டு மாதங்களைத் தாண்டியும் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர்.

இப் பகுதியில் மந்தை அருகில் 700க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்காக 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டி ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டது. அத்துடன் தெருக் குழாய் இணைப்பும் கொடுக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் ஏற்றி கசிவதை உறுதி செய்யும் பரிசோதனையும் முடிவடைந்தது. அதன்பின் குடிநீர் தொட்டி இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.

அப்பகுதி மக்கள் கூறியதாவது : தொட்டி கட்டி முடித்து எட்டு மாதங்களாகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குடிநீருக்காக தினமும் பல கி.மீ., அலைந்து திரிவதால் குறித்த நேரத்திற்கு பள்ளி, வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், குடிநீர் தொட்டியும் காட்சிப் பொருளாகி விட்டது. தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், தண்ணீரை தொட்டியில் ஏற்றி பரிசோதனை செய்து வருகிறோம். தொட்டியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றனர்.






      Dinamalar
      Follow us