sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழந்தைகளுக்கான 'மம்ஸ்' தடுப்பூசியை மீண்டும் செலுத்த துவக்குவது எப்போது

/

குழந்தைகளுக்கான 'மம்ஸ்' தடுப்பூசியை மீண்டும் செலுத்த துவக்குவது எப்போது

குழந்தைகளுக்கான 'மம்ஸ்' தடுப்பூசியை மீண்டும் செலுத்த துவக்குவது எப்போது

குழந்தைகளுக்கான 'மம்ஸ்' தடுப்பூசியை மீண்டும் செலுத்த துவக்குவது எப்போது


ADDED : பிப் 12, 2025 03:55 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இந்தியாவில் இரண்டாண்டுகளாக குழந்தைகளுக்கு மீண்டும் 'மம்ஸ்' எனப்படும் பொன்னுக்கு வீங்கி நோய் பரவ ஆரம்பித்துள்ளதால் நிறுத்தப்பட்ட 'மம்ஸ்' தடுப்பூசியை மத்திய அரசு மீண்டும் செலுத்த துவக்க வேண்டும்.

வைரஸ் நோய் தொற்றுகளால் தட்டம்மை எனப்படும் மணல்வாரி அம்மை (மீசில்ஸ்), பொன்னுக்கு வீங்கி (மம்ஸ்), ஜெர்மன் தட்டம்மை (ரூபெல்லா) நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன.

இந்நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் எம்.எம்.ஆர். , எனப்படும் முத்தடுப்பு ஊசி 2016 க்கு முன் வரை செலுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் 9 வது மாதம் மற்றும் ஒன்றரை வயதில் (பூஸ்டர் டோஸ்) இரண்டு முறை முத்தடுப்பபு ஊசி செலுத்தப்பட்டது.

பரவுகிறது 'மம்ஸ்'


சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி பரவாத நிலையில் 2016 முதல் 'மம்ஸ்' தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு நிறுத்தியது. 2016 க்கு பின் தற்போது வரை 'எம்.ஆர்.,' தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசியாக செலுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் குழந்தைகளுக்கு பரவலாக 'மம்ஸ்' நோய் பரவ ஆரம்பித்துள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.

அவர்கள் கூறியதாவது:


'மம்ஸ்' நோயை வரும்முன் காக்கும் விதமாக தடுப்பூசியை செலுத்தி நோய் பரவாமல் தடுக்கிறோம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'மம்ஸ்' நோய் பரவிய நிலையில் தற்போது 'டீன் ஏஜ்' பருவத்தினருக்கும் பரவுகிறது.

9 மாதத்தில் தடுப்பூசி போடுவது என்பது 5 வயதுக்குள் 'மம்ஸ்' நோய் வராமல் தடுப்பதற்காக தான். பெரியவர்களுக்கு வந்தாலும் நோய் குறித்த புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு தடுப்பூசி கிடையாது. குழந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்பதால் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நோய் பாதித்தால் உமிழ்நீர் சுரப்பியை வீங்கச் செய்து விடும்.

உமிழ்நீர் சுரப்பி வறண்டு உடல்நலம் பாதிக்கும். காய்ச்சலுடன் கன்னத்தின் இருபக்கமும் வீங்கி குழந்தைகள் சாப்பிட முடியாமல் தவிப்பர்.

நோயிலிருந்து குணமடைய ஒருவாரம் முதல் 10 நாட்கள் ஆகும்.

இந்த தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு (ஐ.டி.எஸ்.பி.) திட்டத்திற்கான idsp.mohfw.gov.in இணையதளத்திலும் இதுகுறித்த தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us