sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கைப்பந்து கடத்துவதில் உலக சாதனை முயற்சி

/

கைப்பந்து கடத்துவதில் உலக சாதனை முயற்சி

கைப்பந்து கடத்துவதில் உலக சாதனை முயற்சி

கைப்பந்து கடத்துவதில் உலக சாதனை முயற்சி


ADDED : டிச 30, 2024 05:16 AM

Google News

ADDED : டிச 30, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர், : மதுரை திருநகர் அண்ணா பூங்காவில் அன்னை பூமி புரட்சிகர கைப்பந்து கழகத்தின் சார்பில் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உலக சாதனை முயற்சி நடந்தது.

கைப்பந்து அகாடமி நிறுவனர் அன்பரசன் கூறியதாவது: கைப்பந்தை கடத்துவதில் உலக சாதனை முயற்சியாக கைப்பந்து கழக மாணவர்கள் 16 பேர் நான்கு பிரிவுகளாக பங்கேற்றனர். காலை 8:20 மணிக்கு துவங்கிய போட்டி காலை 9:20 மணிக்கு நிறைவடைந்தது. 16 மாணவர்களும் ஒரு மணி நேரத்தில் 14 ஆயிரத்து 154 முறை பந்தை கடத்தி சாதனை படைத்தனர். முன்பு ஜெர்மனியில் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரத்து 704 முறையே பந்தை கடத்தி சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனையை நம்மாணவர்கள் முறியடித்துள்ளனர். உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு குளோபல் உலக சாதனை புத்தக நிர்வாகி ராஜேஷ் சான்றிதழ், பயிற்சியாளர் குமார் பதக்கங்களை வழங்கினர். திருநகரில் உள்ள கைப்பந்து மைதானத்தை மேம்படுத்தி கொடுத்தால், இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பர் என்றார்.






      Dinamalar
      Follow us