sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!

/

மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!

மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!

மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்!


UPDATED : டிச 12, 2024 10:34 AM

ADDED : டிச 12, 2024 10:33 AM

Google News

UPDATED : டிச 12, 2024 10:34 AM ADDED : டிச 12, 2024 10:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் மதுரையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியத்தில் இன்று (08/12/2024) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

ஈஷா சார்பில் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன.

Image 1355641


இந்த விளையாட்டுப் போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. மொத்தம் 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் 5,000 அணிகளில் 43,000 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இரண்டாம் கட்டமாக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் 6 இடங்களில் நடைபெற்றது. கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர்.

மதுரை மண்டலத்தில் சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து 160 அணிகள் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இருந்து 18 அணிகள் இரண்டாம் கட்டமாக மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற மண்டல அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டிகளின் இறுதியில் முதல் பரிசை தேனி B.K.A.வாலிபால் கிளப் அணியினரும், இரண்டாம் பரிசை மதுரை கட்டளை SSPM அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மற்றும் உதவி காவல் ஆய்வாளர் வினோத் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான பறையாட்டம் நடைபெற்றது. மேலும் பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சிகளை வெகுவாக கண்டு ரசித்தனர்.

Image 1355642


மேலும் மண்டல அளவிலான போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி வேறுபாடுகளை தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.






      Dinamalar
      Follow us