sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

திருச்சி இடிஎல் டூ ஆல் இடிஎல்

/

திருச்சி இடிஎல் டூ ஆல் இடிஎல்

திருச்சி இடிஎல் டூ ஆல் இடிஎல்

திருச்சி இடிஎல் டூ ஆல் இடிஎல்


ADDED : அக் 27, 2025 01:04 AM

Google News

ADDED : அக் 27, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் திருச்சி பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மாமனாருமான எம்பாவை எஸ்.யோகநாதன் நேற்று காலமானார்.

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைமடம் ஊராட்சி, எம்பாவை கே.வி.சுப்பிரமணிய அய்யரின் மகன் எஸ்.யோகநாதன், 83. இவரது மனைவி உமாபாலா.

இவர்களுக்கு முரளிதரன் என்ற மகனும், நளினி, ரேணுகா, ஜெயஸ்ரீ என்ற மூன்று மகள்களும் உள்ளனர். ரேணுகா, 'தினமலர்' நாளிதழ் திருச்சி பதிப்பு ஆசிரியர், டாக்டர் ஆர்.ராமசுப்புவின் மனைவியாவார்.

எம்பாவை எஸ்.யோகநாதன், வயது மூப்பு காரணமாக, தான் பிறந்து வளர்ந்த எம்பாவை பூர்வீக வீட்டில், நேற்று காலை 11:40 மணிக்கு காலமானார். இறுதி சடங்கு நாளை மதியம் 2:00 மணியளவில் நடக்கிறது.

மறைந்த எம்பாவை எஸ்.யோகநாதன், அகில இந்திய கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர், என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை (தலைஞாயிறு) கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

திருவெண்காடு பிராமணர் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் இருந்து, பலரது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டியவர்.






      Dinamalar
      Follow us