/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்கோரிக்கை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம்
/
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்கோரிக்கை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்கோரிக்கை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்கோரிக்கை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம்
ADDED : பிப் 13, 2025 01:34 AM
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்கோரிக்கை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம்
நாமக்கல்:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது, அனைத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் என, நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் பணிபுரிந்து, பதவி இறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கான அரசால் வழங்கப்பட்ட ஆணையை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, இன்று அனைத்து அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 18ல், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும், 21ல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபடுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.