/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
/
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 15, 2024 03:19 AM
நாமக்கல்: தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 14 முதல் 20ம் தேதி வரை பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு, நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில், தீத்தொண்டு வாரம் நிகழ்ச்சி அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் நடக்கிறது.
அதன்படி, நாமக்கல் - பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல், உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த், நிலைய உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம் மற்றும் பணியாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

