sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடை, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைதமிழில் வைக்க மே 15 வரை கால அவகாசம்

/

கடை, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைதமிழில் வைக்க மே 15 வரை கால அவகாசம்

கடை, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைதமிழில் வைக்க மே 15 வரை கால அவகாசம்

கடை, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைதமிழில் வைக்க மே 15 வரை கால அவகாசம்


ADDED : ஏப் 05, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடை, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைதமிழில் வைக்க மே 15 வரை கால அவகாசம்

நாமக்கல்:'கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், மே, 15க்குள், தங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும். மேலும், பெயர் பலகை தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும், அதன் பின் அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்க வேண்டும். கலெக்டரை தலைவராக கொண்டு, அனைத்து தமிழக கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில், தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, வணிகர் சங்கங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனர். இக்குழுவினர், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லுாரிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும், மே, 15க்குள், 100 சதவீதம், தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும், வரும் மே, 15 வரை, தமிழ் பெயர்ப்பலகைகள் வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us