/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை சரிவு
/
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை சரிவு
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை சரிவு
தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு விலை சரிவு
ADDED : நவ 21, 2025 03:02 AM
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 8,470 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, ரூ.230.20, குறைந்தபட்சமாக ரூ.215.29, சராசரியாக ரூ.228.50க்கு ஏலம் போனது. மொத்தம், ரூ.18 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த சந்தையில் ஏலத்திற்கு, 7,524 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, ரூ.206.90, குறைந்தபட்சமாக ரூ.188.89, சராசரியாக ரூ.203.99க்கு ஏலம் போனது. மொத்தம், 14 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

