sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்

/

விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்

விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்

விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்


ADDED : ஏப் 11, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில், குட்டைமுக்கு பகுதியில் உள்ள வேகத்தடை மீது வண்ணம் பூசப்படாததால், இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது.

பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதியில் கொண்டை ஊசி வளைவில் வேகத்தடை உள்ளது. பகல் நேரத்தில் வேகத்தடை இருப்பது, தொலைவில் வரும் போதே வாகன ஓட்டிகளுக்கு தெரியும். இதனால் மெதுவாக, எச்சரிக்கையாக வந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை, அருகில் வரும் போது தெரிவதால், திணறுகின்றனர். கவனக்

குறைவாக வந்தால், வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுவதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக டூவீலரில் வரும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வேகத்தடைக்கு வண்ணம் பூசி, இரவில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை வைக்க, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us