/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'
/
தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'
ADDED : ஜன 22, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'
ப.வேலுார்,: ப.வேலுார் அருகே, கோப்பணம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 58; லாரி டிரைவர். இவரது மகன் தனசீலன், 24, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, தனசீலன் வைத்திருந்த, 500 ரூபாயை, கிருஷ்ணசாமி எடுத்து செலவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனசீலன், வீட்டிலிருந்த காலி பாட்டிலை உடைத்து, தந்தை கிருஷ்ணசாமியை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணசாமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ப.வேலுார் போலீசார், தனசீலனை கைது செய்தனர்.