ADDED : பிப் 01, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
குமாரபாளையம்,:குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம், தட்டாங்குட்டை ஊராட்சி, வாசுகி நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை நாகரத்தினம் வாழ்த்தி பேசினார். குமாரபாளையம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுகந்தி, சித்த மருத்துவ பயன்கள் குறித்து பேசினார்.
வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி, நாட்டு நலப்பணி திட்டத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார். அனைவரும் தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுத்தனர்.