/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 167 கிலோ ரூ.98,000க்கு விற்பனை
/
பட்டுக்கூடு 167 கிலோ ரூ.98,000க்கு விற்பனை
ADDED : ஜன 15, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், :
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், 167 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 630 ரூபாய், குறைந்தபட்சம், 570 ரூபாய், சராசரி, 585 ரூபாய் என, 167 கிலோ பட்டுக்கூடு, 98,000 ரூபாய்க்கு விற்பனையானது.