/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்
/
பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்
பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்
பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்
ADDED : ஆக 24, 2024 07:15 AM
சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி மின்வாரிய அலுவலகம், பழைய கட்ட-டத்தில் செயல்படுவதால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்-துள்ளது.
சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி - ராசிபுரம் மெயின் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகம் உள்ளது. இங்கிருந்து காளப்பநாய்க்கன்பட்-டியை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினி-யோகம் செய்யப்படுகிறது. இந்த மின்வாரிய அலுவலகம், கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது வரை இந்த கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டிருந்தாலும், மிகவும் பழைய கட்டடமானதால், பல இடங்களில் விரிசல் ஏற்-பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே, இந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்-டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

