/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செப்.,3ல் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
/
செப்.,3ல் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : ஆக 31, 2024 12:47 AM
நாமக்கல்: செப்., 3ல், தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், செப்., 3ல், நாமக்கல் - திருச்சி சாலை நளா ஓட்டலில் மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர்
மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்-றனர்.கூட்டத்தில், கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து விவா-திக்கப்படுகிறது. ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலர்கள், தலைமை, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்-ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள், கிளை
மற்றும் வார்டு நிர்வா-கிகள் உள்ளிட்டோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.