ADDED : மார் 20, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., தெருமுனை கூட்டம்
குமாரபாளையம்:குமாரபாளையம் வடக்கு நகர, தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாளையொட்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி அறிவுறுத்தல்படி, தெருமுனை பிரசார கூட்டம், காளியம்மன் கோவில் மைதானத்தில் நடந்தது. நகராட்சி தலைவரும், வடக்கு நகர தி.மு.க., பொறுப்பாளருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பேச்சாளர் சேலம் சுஜாதா, மத்திய அரசு, தமிழகத்திற்கு துரோகம் செய்யும் வகையில் மும்மொழி கொள்கை, பார்லிமென்ட் தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை திணிப்பதை கண்டித்தும், அ.தி.மு.க.,வை கண்டித்தும் பேசினார். நகராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், கவுன்சிலர் ஜேம்ஸ், மகளிரணியினர் பங்கேற்றனர்.