ADDED : அக் 17, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.