sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை அடிவார பகுதியில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு

/

கொல்லிமலை அடிவார பகுதியில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு

கொல்லிமலை அடிவார பகுதியில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு

கொல்லிமலை அடிவார பகுதியில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு


ADDED : ஆக 22, 2024 01:55 AM

Google News

ADDED : ஆக 22, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், ஆக. 22-

கொல்லிமலை அடிவார பகுதிகளான சேந்தமங்கலம், எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில், விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயரிட்டு வந்தனர்.

ஆனால், கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய வருமானம் இல்லாததால், தென்னை மரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர். குத்தகைக்கு விடப்பட்டு, ஆண்டுக்கு மூன்று முறை தேங்காய் அறுவடை பணி நடக்கிறது. தற்போது, விளைந்த தேங்காய்களை பறித்து தேங்காய் பருப்புகளாக காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:

இப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை, ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு, 1,300 ரூபாய் வீதம் பணம் கொடுத்து குத்தகைக்கு எடுத்துள்ளோம். கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் குறைந்தது. தற்போது, நல்ல மழை பெய்துள்ளதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. அதனை பறித்து, தேங்காய் பருப்பாக காயவைத்து

வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us