ADDED : ஆக 10, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்-ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.
மண்டல நகரமைப்பு திட்டக்-குழு உறுப்பினர் மதுராசெந்தில், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 147 மாணவர்களுக்கும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 256 மாணவியருக்கும் விலை-யில்லா சைக்கிள் வழங்கினார். இதையடுத்து, பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில் ஆவாரங்காடு பகுதியில், 43 லட்சம் ரூபாயில் பொருட்கள் மீட்பு கூடம் கட்டுமான பணிக்கான பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.