/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
11ல் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு
/
11ல் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு
11ல் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு
11ல் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு
ADDED : மார் 08, 2025 01:20 AM
11ல் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு
நாமக்கல் தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் கூறியதாவது:
ஆயில் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், 5,514 காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தகாலம் வரும், ஆக., 31ல் முடிகிறது. புதிய ஒப்பந்தத்துக்கு, மார்ச், 15 வரை விண்ணப்பிக்கலாம் என, ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பில், 3,478 எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள லாரிகள் வேலை இழப்பு ஏற்படும் என்பதால், லாரி உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதிய ஒப்பந்தத்தில், கடந்த ஒப்பந்தத்தைவிட அதிக விதிமுறைகள் உள்ளன. அதில், இரண்டாம் டிரைவர் இல்லை என்றால், 10,000 ரூபாய் அபராதம், வண்டி விபத்தில் சிக்கினால், டெண்டரை ரத்து செய்வர். மேலும், இந்த புதிய ஒப்பந்தத்தில், டிரிபுள் ஆக்சில் இருக்கும் வாகனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டபுள் ஆக்சில் லாரி மட்டுமே அதிகமாக இருப்பதால், லாரி உரிமையாளர்கள் வேலை கிடைக்குமா என பயத்தில் உள்ளனர்.
புதிய ஒப்பந்த நிபந்தனைகளால், ஏராளமான டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதால், இவற்றை தவிர்க்க சங்கம் மூலம் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் நிபந்தனைகளை தவிர்க்க வலியுறுத்தவுள்ளோம். இதற்காக, வரும், 11ல் பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.