ADDED : ஜன 22, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.2 கோடிக்குமாடுகள் விற்பனை
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில வாரங்களாக,
மாட்டுச்சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து அதிகமாக உள்ளதால், மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால், நேற்று நடந்த மாட்டுச்சந்தையில், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.