/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
படியில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
/
படியில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 20, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, காவக்காரப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரியாக்குமார், 28; கொத்தனார்.
இவர் கடந்த, 16ல் வீட்டின் படிக்கட்டில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்துள்ளார்.இதில், தலையில் பலத்த காயமடைந்த பிரியாக்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார்.எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

